Arulmigu Sivan Kovil Zuerich Swiss
'அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு"
உலகம் முழுவதும் வியாபித்துள்ள பரம்பொருளை கண்ணுக்குத் தெரியாதபிரம்மத்தை நாம் ஆலயம் அமைத்து விக்கிரகங்களை பிரதிஷ்டைசெய்துவழிபடுவதே இந்து சமயத்தவர்களின் குறிப்பாக சைவ சமயத்தவர்களின்வழிபாட்டுமுறையாகும். இந்த முறையிலே புலம் பெயர்ந்து சுவிற்சர்லாந்துநாட்டில் வாழ்ந்துவருகின்ற சைவசமய மக்களால் 26.08.1994 வெள்ளிக்கிழமைசூரிச் சிவனாலயம் Volkhaus மண்டபத்தில் ஆரம்பிக்கப்பட்டதே.
இவ்வாலயம் தொடர்ந்து பிரதி வெள்ளி தோறும் குறித்த மண்டபத்தில்வழிபாடுகளை நடாத்தி வந்தது. இவ்வேளையில் ஆலய நிர்வாகத்தினருமசைவத் தமிழ்ச் சங்கம்) சிவனடியார்களுமாக சிவபெருமானுக்கு நிரந்தரமானஇடம் தேவை என்ற பெரு விருப்பத்தோடு Wehntaler Str. 293, 8046 Zuerich. என்றமுகவரியில் 14.01.1995 என்ற திகதியில் அங்குரார்ப்பன விழாவினை நடாத்திதொடர்ச்சியாக வழிபாடுகள் நடாத்தப்பட்டு 16.07.1995 ஞாயிற்றுக்கிழமைபஞ்சகுண்ட பிரதிஷ்டா மகாகும்பாபிஷேகம் மிகச்சிறப்பாக நடைபெற்றுமண்டல பூர்த்தியும் சிறப்புடன் நடைபெற்றது. தொடர்ந்து வருடந்தோறும்ஆனிமாத உத்தர நட்சத்திரத்தைத் தீர்த்தமாக (ஆனிஉத்தரம்) வைத்து முதல் பத்துநாட்கள் அலங்கார உற்சவம் நடைபெற்று வந்தது.
அதேபோன்று ஏனைய வழிபாடுகள், விரதங்கள் வருடாவருடம் தைப்பொங்கல், சிவராத்திரி, சித்திரா பூரணைவிரதம், வைகாசிவிசாகம், வரலட்சுமிவிரதம், ஆவணி விநாயகர்சதுர்த்தி, புரட்டாதி சனீஸ்வரவிரதம், நவராத்திரிவிரதம், கேதாரகௌரிவிரதம், கந்தசஷ்டிவிரதம், அன்னாபிஷேகம், கார்த்திகைவிளக்கீடு, மாவீரர்வழிபாடு, சிவவிளக்கேற்றல், விநாயகர் பெருங்கதை முடிவு, திருவெம்பாவை பத்துநாட்களும் திருவெம்பாவை ஓதப்பட்டு தினமும்மணிவாசகப்பெருமான் வீதிவலம் வருவதோடு 9ம்நாள் ஆனந்தமாநடராசப்பெருமானும், சிவகாமிஅம்பாளும் தேரில் பவனிவந்து அடியார்களுக்குஅருள்பாலிக்கும் அற்புதக்காட்சியும் மறுநாள் ஆர்த்திரா தரிசனமும் திருவாதிரைநட்சத்திரத்தில் இடம்பெறுவது இவ்வாலய வழிபாடுகளில்முக்கியமானவையாகும்.
You're listening to live Arulmigu Sivan Kovil Zuerich Swiss Radio
Click here to visit Arulmigu Sivan Kovil Zuerich Swiss homepage